வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வேறுபாடுகள்


ஒரு குறிப்பிட்ட பங்கு அல்லது பங்குச் சந்தைக் குறியீட்டை (இண்டெக்ஸ்) குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன் கூட்டியே ஒப்புக் கொண்ட விலையில் குறிப்பிட்ட தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக வாங்க அல்லது விற்க, வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே போடப்படும் ஒப்பந்தங்கள் ஃப்யூச்சர்ஸ் எனப்படுகிறது. இங்கே பங்கை வாங்க அல்லது விற்க, வாங்குபவர், விற்பவர் இருவரும் சட்டப்படி உரிமைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
 ^  ஆப்ஷனில் வாங்குபவர் உரிமை பெற்றிருப்பார். ஆனால், அவர் சட்டப்படி பங்குகளை வாங்க அல்லது விற்க வேண்டிய அவசியமில்லை.
 ^ ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் வாங்குபவர் மற்றும் விற்பவர் சம அளவிலான ரிஸ்க்கை கொண்டிருப்பார்கள். ஆப்ஷனில் அப்படி அல்ல. இருவருக்குமான ரிஸ்க் வெவ்வேறாக இருக்கிறது.
^ வாங்குபவரின் (ஆப்ஷனை வைத்திருப்பவர்) நஷ்டம், ஒரு குறிப்பிட்ட அளவாக பிரீமியத் தொகையாக (ஆப்ஷன் விலை) இருக்கும். அதே நேரத்தில், லாபம் அளவில்லாததாக இருக்கும். ஆப்ஷனை விற்பவர் அல்லது ஆப்ஷனை விற்றவருக்கான நஷ்டம் அளவில்லாதது. அதே நேரத்தில், லாபம் என்பது ஆப்ஷனை வாங்குபவரிடமிருந்து பெற்ற பிரீமிய தொகையாக இருக்கும்.
^ ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தங்களின் விலை, முக்கியமாக பங்குகளின் விலையால் மாற்றத்துக்கு உள்ளாகும். பங்குகளின் விலை, ஒப்பந்தம் காலாவதியாவதற்கு இருக்கும் மீதியுள்ள நாட்கள், கடன் சந்தையில் வட்டி விகிதம், பங்கின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் போன்றவை ஆபஷன்ஸ் விலையில் மாற்றத்தை உருவாக்குகிறது.    

ஹெல்த் இன்ஷூரன்ஸ்: தனி பாலிசி, ஃப்ளோட்டர் பாலிசி எது பெஸ்ட்.


அதிகமானவர்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் மிகப் பெரிய சந்தேகம் இது.
முதலில் இந்த இரு பாலிசிகளுக்கும் இடையை உள்ள வித்தியாசத்தை தெரிந்துக் கொள்ளுவது நல்லது.
தனிப்பாலிசி என்பது தனிப்பட்ட நபர் ஒருவர் பாலிசி தொகைக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது.
ஃப்ளோட்டர் பாலிசி என்பது ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து ஒரே பாலிசி. இதில், கவரேஜ் என்பது சுழற்சி முறையில் இருக்கும். அதாவது, கவரேஜ் தொகையை, தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர் ஒருவரே மொத்தமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனுடன் அந்த வருஷத்துக்கான கவரேஜ் முடிவுக்கு வந்து விடும். முழுத் தொகையும் பயன்படுத்தப்படவில்லை என்கிற போது மீதி இருக்கும் தொகையை ஏற்கெனவே சிகிச்சை எடுத்துக் கொண்டவரோடு சேர்த்து குடும்பத்திலுள்ள இதர உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரீமியச் செலவை பொறுத்த வரையில் ஃப்ளோட்டர் பாலிசிதான் லாபகரமாக இருக்கிறது. இதை ஓர் எளிய உதாரணம் மூலம் பார்ப்போம்.
உதாரணத்துக்கு நண்பர் குடும்பம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
நண்பரின் வயது 32. அவரின் மனைவி வயது 28, பெண் குழந்தையின் வயது 5..
நண்பர் தனக்கு மற்றும் மனைவிக்கு தனித் தனியாக மூன்று லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பாலிசிக்கும் ஆண்டு பிரீமியம் 6000 ரூபாய். பிள்ளைக்கு தனியே ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் ஆண்டு பிரீமியம் 1,000 ரூபாய். ஆக மொத்தம் 7 லட்ச ரூபாய் கவரேஜ்க்கு மொத்த குடும்பத்துக்கு ஆண்டு பிரிமியம் 13,000 ரூபாய்.
இதற்கு பதில் மொத்த குடும்பத்துக்கும் 10 லட்ச ரூபாய் கவரேஜ்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்து கொண்டால் ஆண்டு பிரீமியம் 13,000 ரூபாய்தான்.

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் தொகைக்கு சேவை வரி உண்டா?


வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணிக்கு சேவை வரி (சர்வீஸ் டேக்ஸ்) இல்லை என மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது.
நடப்பு 2012 - 13 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சேவை வரி 10%&லிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) சேவை அளிப்புத் துறையின் பங்களிப்பு 59% ஆக உள்ளது. அதேநேரத்தில், மொத்த வரி வசூலில் இந்தத் துறையின் பங்களிப்பு வெறும் 10% ஆகத்தான் உள்ளது.
இந்நிலையில் சேவை வரி வசூலை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிறது. இதன் ஓர் அங்கமாக சென்ற ஜூன் (2012) மாதத்தில் சேவை வரி விதிப்பின் கீழ் புதிதாக பல துறைகள் சேர்க்கப்பட்டன. இது, இம்மாதம் ஜூலை முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், வெளிநாட்டினர் இந்தியாவுக்கு செலுத்தும் தொகைக்கும் 12% சேவை வரி விதிக்கப்படலாம் என்கிற சந்தேகம் நிலவியது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மேற்கண்ட பிரிவுக்கு சேவை வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வசிப்பவர்களிடமிருந்து இந்தியா 6,400 கோடி டாலரைப் பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில் வளர்ந்து வரும் நாடுகளில் அதிக தொகையைப் பெற்றுள்ளதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் தொகைக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால், இந்தியாவில் டாலர் வரத்து அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்ள முடியும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து  (என்.ஆர்.அதிக தொகையைப் பெறுவதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகிறார்கள்.

Welcome to share trading – பங்கு வணிகம் செய்யலாம்.



Hello Friends…
I like to share some information and details regarding share trading in this blog. I also want to gather and learn more information from others to be a successful trader.so i share details as per my knowledge for how to start share trading and how to get profit from share trading.

In today many people afraid for share market.because they don’t have enough knowledge regarding trading systems and technical field.In tamilnadu , only least number of people are interested in share market and share trading when comparing to gujarat , Maharashtra ,rajasthan and few other north states.


Some people think that just buying some stocks or shares is not enough to earn profit in share trading.so only they get losses. we should have proper analysis and trading system to how and which stocks/shares we should invest our fund to gain profit and get success.

so in this blog we start to see from the basic for share market and also discuss about share trading.i need your support and comments.

Thank you!
வணக்கம்.. நண்பர்களே..
தமிழில் பங்குவணிகம் தொடர்பான எனக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் மேலும் நானும் பங்கு வர்த்தகத்தை பற்றி அதிகமாக அறிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த வலைப்பதிவு தொடங்கி உள்ளேன்.பங்கு வர்த்தகத்தில் லாபமடைய என்ன செய்வது, எப்படி தொடங்குவது போன்ற  தகவல்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

பங்கு சந்தை என்றாலே பலருக்கும் பயம்தான். காரணம் முறையான தொழில்நுட்ப அறிவும், வியாபார முறைகளும் இல்லாமையுமே இதற்கு காரணம்.


தமிழர்களில் பங்குச்சந்தையில் ஈடுப்பட்டுள்ளோர்களும் மிகவும் குறைவு. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலரும் பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளனர்.பங்குகளை வாங்கி வைத்தாலே போதும் லாபம் பெற்றுவிடலாம் என்று பலரும் நினைப்பதாலேயே, நாம் நஷ்டத்தை சந்திக்கிறோம். முறையான தொழில்நுட்ப பகுத்தாய்வு இருந்தால் மட்டுமே இத்துறையில் வெற்றி அடைய முடியும்.

எனவே இந்த வலைப்பூவில் நாம் பங்குச்சந்தையின்  அடிப்படை முதல் அலசலாம்.உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகிறன.


நன்றி!

பங்குச் சந்தைக்கும் படிப்பு இருக்கு...


பங்குச் சந்தை என்பது பணம் முதலீடு செய்வதற்குரிய இடம் மட்டும்தானா? இல்லை, அங்கு வேலைவாய்ப்பும் நிறைந்துள்ளது. வேலைவாய்ப்பு வணிகம் படித்தவர்களுக்கு மட்டும்தானா? அதற்கும் இல்லை என்பதுதான் பதில்! எந்தப் படிப்பைப் படித்திருந்தாலும், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனும் தேசிய பங்குச் சந்தை நடத்தும் சில சான்றிதழ் படிப்புகளைப் படித்தால் பங்குத் தரகு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத அளவுக்கு வருமானம் கிடைப்பதோடு, இத்துறையில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்பும் இருப்பது அனைவருக்கும் தெரியாத ஒன்று. எனினும், சமீப காலமாக இத்துறையைப் பற்றிய எண்ணம் மக்களிடையே மாறி வருகிறது. விஷயம் தெரிந்தவர்கள் பங்குச் சந்தையில் அதிகளவில் முதலீடு செய்வதுமட்டுமன்றி, இத்துறையில் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர். இருப்பினும் இத்துறையைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இப்போதுதான் ஏற்படத் தொடங்கியுள்ளது.
 "நம்நாட்டில் இன்று மக்கள் தொகை ஏறத்தாழ 125 கோடியை எட்டிவிட்டதென்றாலும், இவர்களில் 1.75 கோடி பேர்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கான டீமேட் கணக்கை வைத்துள்ளனர். இதிலிருந்தே இத்துறை குறித்து மக்கள் எந்தளவில் தெரிந்து வைத்துள்ளனர் என்பது தெரிய வரும்.
தற்போது அந்த நிலை மாறி வருகிறது. விஷயம் தெரிந்து முதலீடு செய்தால் மற்ற எல்லா நிதி திட்டங்களையும்விட இதில் அதிக வருமானம் கிடைக்கும் என அறியத் துவங்கியுள்ளனர். அதே போல், இத்துறையில் நிறைய வேலை வாய்ப்பு இருப்பது குறித்தும் உணரத் துவங்கியுள்ளனர்.
இத்துறையில் உள்ள சில படிப்புகளைப் படிப்பதன் மூலம் வங்கிகள், பங்குத் தரகு நிறுவனங்கள், கமாடிட்டி சந்தை, டெரிவேட்டிவ் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் பணிபுரியலாம்.
மணிபால் கல்வி நிறுவனத்துடன் இணைந்து தேசிய பங்குச்சந்தை பல்வேறு படிப்புகளை நடத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்கவை, பங்குச்சந்தை அடிப்படை (Basics of stock markets), டெரிவேட்டிவ்ஸ் - டிரேடிங், கிளியரிங் அண்ட் செட்டில்மென்ட் (Derivative - trading, clearing & Settlement), ஃபண்டமென்டல் அனாலிசஸ் (Fundamental Analysis), டெக்னிக்கல் அனாலிசஸ் (Technical Analysis) ஆகியவையாகும்.
மும்பையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இங்கு கரன்ஸி டெரிவேட்டிவ்ஸ் குறித்த படிப்பு, இன்ட்ரஸ்ட் ரேட் டெரிவேட்டிவ்ஸ் குறித்த படிப்பு, ஷேர் டிரான்ஸ்பர் ஏஜென்ட்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூட்டர், டெபாசிட்டரி ஆபரேஷன், செக்யூரிட்டிஸ் ஆபரேஷன் அண்ட்ரிஸ்க் மேனேஜ்மென்ட், பர்சனல் ஃபைனான்சியல் அட்வைஸர் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள்
இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னை பங்குச்சந்தை அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
பயிற்சிக் கட்டணமாக, தேர்ந்தெடுக்கும் படிப்புக்கேற்ப ரூ.1,000-யிலிருந்து ரூ.5,000 வரை வசூலிக்கப்படுகிறது. தேர்வுகளைப் பொருத்தவரை, நமது வசதிக்கு ஏற்றாற்போல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான தேர்வுகள் தினம்தோறும் என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்தில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக அங்கு பதிவு செய்தால் போதும்.
இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துவக்கத்திலேயே பங்குத் தரகு நிறுவனங்களில் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப, திறமைக்கு ஏற்றாற்போல் கமிஷன் அடிப்படையிலும் ஊதியம் கிடைக்கும்.
இப்படிப்புகளில் சேர 12-ம் வகுப்பு முடித்தாலே போதுமானது. எனினும், ஏதேனும் ஒரு டிகிரி முடித்துவிட்டு சேருவது நல்லது. வணிகவியல், பொருளாதாரம் ஆகிய படிப்புகளைப் படித்தவர்களுடன் கூட அறிவியல், கணிதம் போன்ற பாடங்களைப் படித்தவர்களும் இதில் சேரலாம். எம்.பி.. போன்ற மேலாண்மை புரஃபஷனல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களும் மேற்கண்ட சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இப்படிப்புகளைப் படிப்பதன் மூலம், நாம் பிற நிதி மற்றும் பங்கு நிறுவனங்களில் வேலைக்குச் சேரலாம். அல்லது நாமே சுயமாக பங்குத் தரகு நிறுவனங்களைத் தொடங்கலாம்.
இந்தப் படிப்புகளைத் தவிர, முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாதம்தோறும் 3-வது சனிக்கிழமையன்று  சென்னை பங்குச்சந்தை அலுவலகத்தில் மதியம் 3 மணிக்கு இலவச வகுப்புகளை நடத்துகிறோம். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பயன்பெறலாம். பங்குச் சந்தை குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்பட தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு பங்குச் சந்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தற்போது சென்னையில் சில பள்ளிகளில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். மாணவர்கள் எவ்விதத் தயக்கம் இன்றி இத்துறையை தேர்ந்தெடுத்தால் பிரகாசமான எதிர்காலம் உள்ளது''

நிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்?
மும்பையிலுள்ள வெலிங்கர் மேனேஜ்மெண்ட் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் இதில் 3 மாத சிறப்பு டிப்ளமோ படிப்பைத் தருகிறது.
இந்தப் படிப்புக்கு எம்.பி.. முடித்திருப்பவர் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தொடர்பு முகவரி
Welingkar Institute of Manage ment Development & Research,
L Napoo Road, Near Matunga
(Central Rly.), Mumbai 400 019.
Call 24178300 Ext: 450/ 460/ 203

இன்டர்நெட் முகவரி: www.welingkar.org

RAKESH JHUNJHUNWALA-பங்குச்சந்தை இன் முடிசூடா மன்னன்


பங்கு சந்தை என்றாலே பயம் . பணத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு மன நிலைமை நம்மிடம் இருக்கிறது பங்கு சந்தை இல் வெற்றி பெற்ற சிலரின் சரித்திரத்தை எடுத்து பார்த்தால் , அவர்களது வெற்றி இன் ரகசியம் புரியும் இந்த பதிவில் ஒரு சாதாரன மனிதர்  எவ்வாறு பங்கு சந்தை இல் வெற்றி பெற்றார் என்பதை பார்போம்.சாதாரன மனிதர்களும் பங்கு சந்தை இல் லாபம் பெற முடியுமா என்பதற்கு இவர் ஒரு எடுத்து காட்டு .
RAKESH JHUNJHUNWALA இவர் தான் இன்றைய இந்திய  பங்கு சந்தை இல் "காளை இன்  செல்ல பிள்ளையாக " வர்ணிக்க படுகிறார்.
பிஎஸ்இ சென்செக்ஸ் 150  புள்ளிகளாக  இருந்த போதுஅவர் 1985 இல் தனதுவாழ்க்கையைதொடங்கினார்.அவர்மாதங்களுக்கு முன்பு RS 43 வாங்கிய டாடா டி (TATA  tea ) பங்குகள் ரூ 143  விலையில் வர்த்தகமான போது தனது முதல் லாபத்தை பார்த்தார். பிறகு படி படியாக billionareஆகியது தனி வரலாறு. நீண்ட கால முதலீட்டில் பங்குகளை வாங்கினால் நிச்சியம் லாபம் பார்க்கலாம் என்பதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துகாட்டு.அவருடைய கொள்கைஹளை நாமும் பின் பற்றினால் ,லாபம் அடையலாம்.அவருடைய கொள்கைகளில் சிலவற்றை இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.
 1 )buy  right  AND  hold  tight  இது தான் இவரது தாரக மந்திரம்.சரியான சமயத்தில் பங்குகளை வாங்கி நீண்ட காலம் வைதிருந்து லாபம் பார்ப்பது.அனால் அவை அடிப்படையில் நல்ல தர மான பங்குகளாக இருக்க வேண்டும்.
2)கண்மூடித்தனமாபெரிமுதலீட்டாளர்கள் சொல்வதை பின்பற்ற கூடாது .
3 ) பங்குசந்தைன் அடிப்படைகளை தெரிந்து கொண்டு , நீங்களாக சந்தை இன் போக்கை தீர்மானிக்க கற்றுக்கொள்ள கொள்ள வேண்டும்.
4) நீங்கள் ஒரு பங்கினை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் வியாபாரத்தையும் சேர்த்து வாங்குவதாக அர்த்தம் .அதனால் அந்த வியாபாரம் நீண்ட காலத்திற்கு நிலைக்குமா ,அந்த தொழிலுக்கான எதிர்காலம் அகியவற்றை பார்த்து வாங்க வேண்டும்.
5) எல்லோரும்   வாங்கும் போது விற்று விடு .விற்கும் போது வாங்கு.
6 )எந்த ஒரு பங்கையும் அதிக  விலை கொடுத்து வாங்காதே .
7 )ஒரு நிறுவனதினுடிய வளர்ச்சி விகிதம் பிடித்திருந்தால் , அந்த பங்கினை வாங்கி , அதற்கு சிறிது காலம் அவகாசம் கொடு .
8)உன்னுடைய பங்கு நீ விற்கலாம் என்று வைத்திருந்த விலையை அடைந்து விட்டால் , நிச்சியமாக அதை விற்று விடு .என்னும் அதிகமாக போகும் என்று வைத்து இருக்க்க வேண்டாம் .
9)தோல்விக்கு தயாராக இரு .எவளவு தோல்வி வந்தாலும் அதை தாங்கும் மனபக்குவம் வந்த பிறகே பங்கு சந்தை இல் வியாபாரம் செய்.
10 )யார் சொன்னாலும் கேக்காதே .பங்கினை வாங்கு வதற்கு முன்பு ஆராய்ந்து  முடிவு எடு.
11 )நிறுவனத்தினுடைய management எவ்வாறு உள்ளதை பார்த்து முடிவு எடு.
12 )அடுதவருடைய பணத்தில் முதலிடு செய்யாதே . கடன் வங்கியும் பங்கு சந்தையில் வியாபாரம் செய்யாதே
13 )உனக்கு என்று ஒரு போர்ட்போலியோ வை உருவாக்கு. அதில் 1-15  நிறுவனத்தின்  பங்குகளை சேர்த்து  கொண்டு மெதுவாக முதலீடு செய் .
14 )பங்குகளை அவசர பட்டு வாங்காதே.
15 )மற்றவர்கள் கண்டு கொள்ளாத, அடிபடையில் நல்ல பங்குகளாக,குறைந்த விலை இல் வாங்கி போடு.