ஞாயிறு, 30 ஜூன், 2013

செந்தூரின் கவிதை-1:

உலகம் உருண்டு கொண்டிருக்கிறது…நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது
நாட்கள் கடந்து கொண்டிருக்கிறது
நொடிகள் சென்று கொண்டிருக்கிறது
ஆனால் நீ நின்று கொண்டிருக்கிறாய்.

       

வியாழன், 27 ஜூன், 2013

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு

 
 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதாம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

இன்சுலின் சுரப்பு

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதாம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதாம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில் இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும். அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது.

பாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.

உடல்பருமன்

பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மிக்கேல் வியேன் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று அடித்துக்கூறுகிறார்.

நன்றி:
நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள்

அமெரிக்கா

சர்க்கரை நோய் (Diabetes) வராமலிருக்க....

இன்று, சர்க்கரை நோய் ரொம்ப `பொதுவான' வியாதியாகிவிட்டது. `40'-ஐ தாண்டிவிட்டாலே சர்க்கரை நோய் சாதாரணம் என்ற நிலை உருவாகிவிட்டது. உலகிலேயே அதிக செலவு வைக்கக்கூடிய வியாதியாக `டைப் 2' சர்க்கரை நோய் கருதப்படுகிறது. சர்க்கரை நோயுள்ள வயது வந்தோருக்கு, சர்க்கரை நோயில்லாதவர்களை விட இதய நோயால் உயிரிழப்பு அபாயம் நான்கு மடங்கு அதிகம் என்று அச்சுறுத்துகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு முந்திய `பிரி டயபடீஸ்' நிலையும் அதிகரித்து வருகிறது. விடலைப் பருவத்தினர் மற்றும் வயது வந்தோரில் 13 சதவீதம் பேருக்கு `பிரி டயபடீஸ்' இருக்கிறது. இவர்கள் போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், 10 ஆண்டுகளில் `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படக் கூடும். `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்பட்டபின் அதைக் குணப்படுத்துவது கடினம்.
 
எனவே, `வருமுன் காப்போம்' அடிப்படையில் ஜாக்கிரதையாக நடந்துகொள்வது நம் கையில்தான் இருக்கிறது. `பிரி டயபடீஸ்' அல்லது சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய சில அபாய காரணிகள் இருக்கின்றன. பின்வரும் அவற்றை அறிந்து, தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுங்கள்:

1. உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.

2.சர்க்கரை நோயுள்ள பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளைப் பெற்றிருப்பது.

3. வெளிநாடு வாழ் இந்தியராயிருப்பது. (வளர்ந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சர்க்கரை நோய் அபாயம் எட்டு மடங்கு அதிகம்.)

4. நான்கு கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பது.

5. அதிக ரத்த அழுத்தம் (120/எம்.எம்.எச்.சி.) இருப்பது அல்லது அதற்காகச் சிகிச்சை பெறுவது.

6. எச்.டி.எல். அல்லது நல்ல கொலஸ்ட்ராலை 35 எம்.ஜி./டி.எல்.-க்குக் கீழே கொண்டிருப்பது.

7. `பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம்' (பி.சி.ஓ.எஸ்.) இருப்பது.

8. முந்திய ரத்தப் பரிசோதனைகளில், `பாஸ்டிங் குளுக்கோஸ்' மற்றும் `குளுக்கோஸ் டாலரன்ஸ்' பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருவது.

9. இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய அதிக எடை, `அகன்தோசிஸ் நிக்ரிகன்ஸ்' (கழுத்தைச் சுற்றி அல்லது அக்குளில் அடர்நிற, பஞ்சு போல் மென்மையான தடிப்புகள்) போன்ற அறிகுறிகள்.
 
10. `கார்டியோவாஸ்குலார்' பாதிப்புக்கு உட்பட்டவராக இருப்பது. உங்களுக்குத் தற்போதைய சோதனையில் சர்க்கரை நோய் இல்லை என்று தெரியவந்தாலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதனை செய்துகொள்வது அவசியம். சோதனை முடிவுகள், அபாயக் காரணிகள் அடிப்படையில் மேலும் குறுகிய இடைவெளியில் சோதனைகளைச் செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கூடும்.

சுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol)

இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுண்டு.  அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.  அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:


சுகர் (Diabetes):

Venous Plasma Glucose (mg/100ml) வெறும் வயிற்றில்:

80 லிருந்து 110  ---நன்றாகவே இருக்கிறது

111 லிருந்து  125   ---சுமார் ரகம்தான்

125 க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

Post Prandial (PP) உணவுக்கு 2 மணி நேரத்திற்குப் பின்:

120 லிருந்து 140  ---நன்றாகவே இருக்கிறது

141 லிருந்து  200   ---சுமார் ரகம்தான்

200  க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

இரத்த அழுத்தம் (Blood Pressure):

BP (mm/Hg):

130/80 ---நன்றாகவே இருக்கிறது

140/90 ---சுமார் ரகம்தான்

அதற்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கொலஸ்ட்ரால் (Cholesterol):

Cholesterol mg/100ml:

200க்குகீழே ---நன்றாகவே இருக்கிறது

200லிருந்து  240   ---சுமார் ரகம்தான்

240க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

நல்ல கொலஸ்ட்ரால்:

(HDL) mg/100ml):

45க்குமேல் ---நன்றாகவே இருக்கிறது

35லிருந்து  45   ---சுமார் ரகம்தான்

35க்குகுறைவு  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கெட்ட கொலஸ்ட்ரால்:

(LDL) mg/100ml):

100க்குகீழ் ---நன்றாகவே இருக்கிறது

100லிருந்து  129   ---சுமார் ரகம்தான்

130க்குமேல்  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

நீங்களாகவே திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்,  மென்னூல், இணைய முகவரி மற்றும் ஆகியவை பற்றி….

திருமணப் பொருத்தம் – 10 பொருத்தம்:

 நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,
தினப் பொருத்தம் – ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.
கணப் பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.
மகேந்திரப் பொருத்தம் – திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.
ஸ்திரீ தீர்க்கம் –  திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.
யோனிப் பொருத்தம் – கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.
திருமணப் பொருத்தம் பார்க்கலாம் வாங்க!
ராசிப் பொருத்தம் – கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அமைய உதவும் பொருத்தம்.
ராசி அதிபதி பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.
வசியப் பொருத்தம் – கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.
ரஜ்ஜுப் பொருத்தம் – தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.
வேதைப் பொருத்தம் – கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.
சரி பத்து பொருத்தங்கள் என்னவென்று பார்த்தாச்சு. இவை இருக்கிறதா இல்லையா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா? இதோ உங்களுக்காக,

திருமண பொருத்தம் பார்க்க உதவும்மென்னூல்( E- Book):


திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்னூல்

இணையத்தில் காணக் கிடைக்கும் இந்த 30 பக்க மென் நூலில் திருமண பொருத்தம் ஒவ்வொன்றும் தனித்தனியாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து பார்க்க உதவும் இந்த மென்னூலை இங்கேதரவிறக்கலாம்.

திருமண பொருத்தம் பார்க்க உதவும்இணையதளம் (Website):

தினகரன் ஜோதிடம் இணையதளத்தில் மணமகண் மற்றும் மணமகள் ராசி மற்றும் நட்சத்திரம் கொண்டு 10 திருமண பொருத்தங்களும் உள்ளதா இல்லையா என்றும், பொருத்தமில்லை/ சுமாரான பொருத்தம்/ பொருத்தம்/ நல்ல பொருத்தம் என்று இருக்கும் பொருத்தங்களின் அடிப்படையில் நமக்கு முடிவுகள் வருமாறி இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி இதோ!

 திருமண பொருத்தம் பார்க்க உதவும்மென்பொருள் (Software):

உங்களுக்கு இணைய இணைப்பு எப்போதும் இருப்பதில்லை என்று வருத்தமா? கவலை விடுங்கள். இணையவெளியில் கிடைக்கும் இந்த மென்பொருள் கொண்டு நீங்கள் 10 பொருத்தமும் ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு இருக்கிறதா என்று பார்த்து விடலாம். அதோடு மட்டுமல்லாது, ஒரு ஆண்/ பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண்/ ஆண் நட்சத்திரங்களும், பொருத்தங்களும் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை நீங்கள் Print செய்து கொள்ள முடியும் என்பது மற்றுமோர் தனிச் சிறப்பு. இந்த மென்பொருள் இங்கே கிடைக்கிறது.
நன்றி: தமிழ்வளம்

நல்ல நேரம்/ நாள் பார்க்கும் போது கவனிக்க வேண்டியன

நல்ல நேரம் அல்லது நல்ல நாள் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயங்களான திதி, கரி நாள், சந்திராஷ்டமம், ஓரைகள், பஞ்சகம் ஆகியன பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கரி நாள் ஆக இருக்கக் கூடாது.
திதிகளில் அஷ்டமி, நவமி திதிகளை தவிர்க்க வேண்டும்.
யோகம் மரண யோகமாக இல்லாமல் சித்த யோகம் அல்லது அமிர்த யோகம் ஆக இருக்க வேண்டும்.
ஓரைகளில் சூரியன், செவ்வாய் மற்றும் சனி ஓரைகள் இல்லாமல் பிற சுப ஓரைகள் வர வேண்டும்.
ராகு காலம், எமகண்ட நேரங்கள் இருக்கக் கூடாது.
பஞ்சகங்களில் பொதுவாக அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். முக்கியமாக கீழ்க்கண்ட பஞ்சகங்களில் கீழே குறிப்பிட்டுள்ள சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள்;      திருமணம், சீமந்தம், புதுமனை கோல, குடி போகக் கூடாது.
மிருத்யு பஞ்சகம்: பங்குத் தொழில், லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்கக் கூடாது.
அக்னி பஞ்சகம்: பஞ்சு, பெட்ரோல் பொருள்கள், நூல், துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்கக் கூடாது.
ராஜ பஞ்சகம்: அரசு, வங்கி மற்றும் பொது நிதி நிறுவனங்கள், கடன் வங்கி நடத்தும் தொழில் தொடங்கக் கூடாது.
நிஷ் பஞ்சகங்கள் மிக்க சுபம்.
கௌரி பஞ்சாங்கத்தில் சோர, ரோக, விஷ காலங்கள் இருக்கக் கூடாது.
முக்கியமாக அந்த நட்சத்திரக்காரர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது.
நன்றி: தமிழ்வளம்

TNSTC Online Booking

TNSTC Online Booking செய்வது பற்றிய விளக்கங்கள் படங்களுடன்:
தமிழ் நாடு அரசு TNSTC பேருந்துகளுக்கு இந்திய ரயில்வேயில் உள்ளது போல Online Booking வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான இணையதளம்: http://tnstc.in/
இந்த இணையதளத்தின் மூலம் தமிழகத்தின் எல்லா வழித்தடங்களிலுன் உள்ள Semi Deluxe Buses, Super Deluxe Buses, Video Coach Buses, Ultra Deluxe Buses, Air Suspension Buses, Air Condition Buses அனைத்திலும் வீட்டில் இருந்தவாறே அலைச்சலின்றி இணையத்தின் வாயிலாகவே Bus Ticket Booking செய்து கொள்ள முடியும்.
உங்களுக்கு தேவையான ஜன்னல் சீட்டை உங்கள் வீட்டு ஜன்னலோரத்திலிருந்தபடியே பதிவு செய்ய முடியும்.
இதற்கான படிப் படியான விளக்கம் இதோ:

TNSTC Online Booking – Registration / Sign In

TNSTC இணையதளத்தின் Online Booking செய்வதற்கென்று உள்ள Registration Form Fill செய்து உங்களுக்கென்று ஒரு Account பெற்றுக்கொள்ளுங்கள்.
TNSTC இணையதளத்தில் Sign In செய்து கொண்டு… E Ticket Booking என்ற பிரிவினை Select செய்து கொள்ளவும்.
புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தின் முதல் மூன்று எழுத்துக்களை கொடுத்து அந்த வழித்தடத்தினை பெறலாம்.
இப்போது வரும் Form ல் பயணம் செய்ய வேண்டிய தேதி, புறப்படும் இடம், சேரும் இடம், One way/ Round Trip, பயணிகள் விவரம், பேருந்தின் வகை ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.

TNSTC Online Ticket Reservation- Select Service/ Seat Layout

தேவைப்படும் பேருந்து வகையை List ல் இருந்து Select செய்து கொள்ளுங்கள்.
தற்போது கிடைக்கும் Seat Availability Layout ல் இருந்து உங்களுக்கு தேவையான இருக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பயணிகள் பெயர், பேருந்தில் ஏற வேண்டிய இடம், இறங்க வேண்டிய இடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யுங்கள்

TNSTC Online Ticket Booking -Make Payment/ Print Bus Ticket

நீங்கள் எடுத்துச் செல்ல விரும்பும் ID Proof, உங்கள் Mail ID போன்ற விவரங்களை கொடுங்கள்.
Visa அல்லது Master Card மூலம் நீங்கள் இணையத்தின் வாயிலாகவே பணம் செலுத்த முடியும்.
தற்போது திரையில் உங்களது Ticket. TNSTC Online Booking மிகவும் எளிதானது. இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள்!

TNSTC Online Bus Ticket – Mobile Booking

Mobile Phone மூலம் TNSTC Online Ticket Booking செய்ய

TNEB Online Bill Payment

TNEB Online Bill Payment பற்றிய விளக்கம் – படங்களுடன்
தமிழ் நாடு மின்சார வாரியம் இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக விழுப்புரம், கோவை, திருச்சி, சென்னை, வேலூர், ஈரோடு, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TNEB Online Bill Payment – Regions:

TNEB Online Bill Payment செலுத்துவதற்கான இணையதளம் : https://www.tnebnet.org/awp/login

TNEB Online Bill Payment Registration:

TNEB இணையதளத்தில் உறுப்பினராகவும். உங்களது மின்சார அட்டையில் உள்ள உங்களது Consumer Number இதற்கு தேவைப்படும். உதாரணத்திற்கு:
TNEB Consumer Number
மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் Region Code இல்லாமல் வெறுமனே Section Code, Distribution Code மற்றும் Service Number மட்டும் கொடுத்து உங்களது பெயர் மற்றும் முகவரியை சரிபார்த்துக் கொள்ளவும். உங்களது Mail ID மற்றும் முகவரி போன்ற விவரங்களை கொடுத்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும்.

TNEB Online Bill Payment – Payment History and  Bill Status:

உங்களது Bill பற்றிய விவரங்கள், மாதாந்திரப் பயன்பாட்டுக் கட்டணம், நீங்கள் பணம் செலுத்திய விவரம் ஆகியவை பற்றிய விவரங்கள் இங்கே காணலாம்.
பணம் செலுத்துவதற்காக நீங்கள் Visa மற்றும் Master போன்ற Credit/ Debit கார்டுகளை உபயோகித்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாது Net Banking மூலமும் பணம் செலுத்தலாம்.
உங்களது பயன்பாட்டுக் கட்டணம் (Monthly Bill) மட்டுமல்லாது முன்பணமும் (Advance) செலுத்தலாம்.
நீங்கள் பணம் செலுத்தியதற்கான இரசீது உங்கள் Mail ID க்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.
Mobile Alert மூலமும் பணம் செலுத்தியதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். செய்வார்கள் என நம்புவோம்.

TNEB Online Bill Payment – Support:

இந்த இணையதளத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இதன் Customer Support வசதி. ஒவ்வொரு பயனருக்கென்று தனித் தனியாக விசாரணைகளை இணையத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் உங்கள் TNEB Bill Status, TNEB Payment Enquiry போன்றவற்றை இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் இருந்தபடியே அலைச்சலின்றி மின்கட்டணம் செலுத்தி பயனடையுங்கள்.
உங்கள் நண்பர்களுடன் E Mail ல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tamil Typing Websites

Type in Tamil – Google Transliteration


Type in Tamil
Google இணையதளத்தின் அங்கமான Google Transliteration மூலம் இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்யலாம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தைகளை நமக்கு ஆலோசனையாக தருகிறது. உதாரணமாக Kala என்று Type செய்தால் கல, கால, கள என்று ஆலோசனை வருகிறது. தவறுகளைக் குறைக்க இது உதவியாக இருக்கும். இந்த இணையத்தின் மூலமாக அனேகமான இந்திய மொழிகளில் Type செய்ய முடிகிறது. இணைய இணைப்பு தேவைப்படுவது இதன் பலவீனம்.

Quillpad - Typing in Tamil has never been easier


ஆங்கிலம் மட்டும் போதுமானதல்ல என்ற அடைமொழியுடன் வரும் இணையம் Quillpad. இந்த இணையதளத்தில் Tamil Typing செய்வதோடு மட்டுமின்றி அதனை இணையத்தில் சேமித்து வைக்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இதற்கான இணையம் http://quillpad.in/editor.html 

Tamil Typing Software for Android Phones – TamilVisai


தமிழ் எழுத்துக்களை உங்கள் மொபைல் போனில் எழுதலாம். இதற்கான இணையதளம்தமிழா.காம். தமிழ்விசை மென்பொருள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான விசைப்பலகை. இதன் துணை கொண்டு Tamill 99, Tamil phonetic,English phontic மற்றும் English ஆகிய அமைப்புகளில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்யலாம். தமிழ் 99 எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத்துக்கள் keyboard ல் அமைக்கப்பட்டுள்ளன. Tamil phonetic மற்றும் English phonetic keyboard ல் உள்ள அமைப்பு எளிமையாக உள்ளது. இதில் ka என்று type செய்தால் க என்று வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. Android Phone application க்கான Google இணையதளமான Google play ல் download செய்யலாம். Download TamilVisai Tamil keyboard for android for Tamil Typing in Android Mobile Phones @: https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai&hl=en

NHM Writer – Free Tamil Typing Software


Tamil Typing Sofware
NHM Writer மென்பொருள்  அஸ்ஸாமீஸ்,பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் தமிழ் என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. இவை மட்டும் அல்லாமல் Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. ஒரு முறை இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் அதன் பிறகு இணைய இணைப்பு தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம். இந்த Tamil Typing Software கிடைக்குமிடம்: http://software.nhm.in/products/writer

Azhagi – Tamil Typing Software With Free Tamil Fonts


அழகி - தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் இலவச மென்பொருள். இதன் சிறப்பம்சம் பல்வேறு எழுத்துருக்களையும் உபயோகிக்க முடியும் என்பதே. 300 க்கும் மேற்பட்ட Tamil Fonts கிடைக்கின்றன.

IRCTC Tatkal Booking Made Easy

IRCTC Tatkal Booking Made Easy


IRCTC Tatkal Booking பண்றதுக்குள்ள நம்ம கஷ்டம் இருக்கே!
இத Easy ஆக்கறதுக்கு தான் இந்த Magic Autofill Tool. இதுக்கான வெப்சைட்
IRCTC Tatkal Booking காலைல 10 மணிக்கு ஓபன் ஆகும். அதுல Ticket Book பண்ண போராட்டம் இருக்கே… தெருக்குழாய்ல தண்ணி பிடிக்கறதும் IRCTC Tatkal Ticket Book பண்றதும் ஒண்ணு.
இதுக்காக இந்தியாவோட முதல் தொழில்முறை ப்ளாக்கர் அமித் அகர்வால் கண்டுபிடிச்ச Technique தான் Magic Auto Fill.
யார் யார்க்கு டிக்கெட் வேணும், Name மற்றும் எந்தெந்த Berth, ID Card Details எல்லாம் முன்னாடியே Fill பண்ணி வெச்சுக்கோங்க. அத Google Chrome Browser ல Bookmark பன்ணி வெச்சுக்கோங்க.
10 மணிக்கு IRCTC Tatkal Ticket Open ஆனதும், ஒரே கிளிக்ல புக் பண்ணிரலாம்.
IRCTC Tatkal Booking
உங்களுக்கு புரியலயா? இந்த Youtube வீடியோவைப் பாருங்க. எல்லாம் தெளிவா விளக்கிருக்காங்க.
அப்புறம் என்ன… Happy Journey தான்!
IRCTC Tatkal Booking பண்றப்போ 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல ஓடர மாதிரி Fast ஆ நம்ம மூளை, கண், கை எல்லாம் வேலை செய்யணும்.
மறக்காம Net Banking க்கு பதிலா Debit Card மூலமா பணம் கட்டுங்க.இது இன்னும் நேரத்தை குறைக்கும். ஏன்னா Net Banking மூலமா பணம் கட்டுனா ரெண்டு தடவ HTML Load ஆகறதுக்கு நேரமாகும்.
ஒரே நேரத்துல ரெண்டு Browser ல IRCTC Website ஓபன் பண்ணாதீங்க.
நம்ம Fraud பண்றத கண்டுபிடிக்கறதுல அவங்க கில்லாடிங்க.
அப்பப்ப http://www.erail.in/  வெப்சைட்ட ஒரு கண்ணு வெச்சு பாதுக்கோங்க.
உங்களோட Ticket Availability ஆன்லைன்ல Update ஆயிட்டே இருக்கும்.

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்
கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும்கல்லூரி)
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை
அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
3.ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4. டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.
5.பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7.கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
8.டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
9.பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.
நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
10.கிரெடிட் கார்டு!
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை:
15 வேலை நாட்கள்.
நடைமுறை :
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
Courtesy :விகடன்